எம்ஜிஆர் நகரை உலுக்கிய பஸ் எரிப்பு வதந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வதந்தியான செய்தியாள் 42 பேரின் உயிரைக் குடித்த எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் ஒரு வதந்தி பரவி அப்பகுதி மக்களைபீதிக்குள்ளாக்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்தசோகச் சம்பவத்திற்கு வதந்தி பரப்பிய சிலரே காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இன்னொரு வதந்தி வியாழக்கிழமை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர். நகருக்கு அருகே உள்ள கே.கே. நகரில் சிலர் அரசுப் பேருந்தைத் தீவைத்துக் கொளுத்தி விட்டதாக கூறினர்.

இதனால் எம்.ஜி.ஆர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவி மக்கள்தெருக்களில் குழுமினர். ஆனால் அத்தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்ததும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் ரேடியேட்டர் சூடாகி வெடித்து தீப்பிடித்துக் கொண்டதைத் தான் சிலர் பஸ்எரிக்கப்பட்டதாக கொளுத்திப் போட்டுள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள மக்களிடம் இப்படிப் பொய்யான தகவலைப்பரப்புவோரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் அடையாளம் காட்ட வேண்டும்.

வதந்திகளை நம்பாமல் காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தெளிவு பெற வேண்டும் என்று பொதுமக்களுக்குப் போலீஸார்அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+