கண்ணப்பனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: விஜயகாந்த்
மதுரை:
கூட்டணி அமைக்காமல் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் ராஜ.கண்ணப்பனுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராஜ. கண்ணப்பன், கூட்டணி அமைக்காமல் தமிழகத்தில் யாருமே ஆட்சி அமைக்கமுடியாது, இது கூட விஜயகாந்த்துக்குத் தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார்.இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கருத்து தெரிவிக்கையில், கண்ணப்பன் போன்றோருக்கெல்லாம்என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுவோம்.
அதில் மாற்றம் இல்லை. கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சட்டமா என்ன? தேர்தல் கமிஷன் எங்களதுகட்சியை பதிவு செய்வது குறித்து சில விளக்கங்களைக் கேட்டுள்ளது.
அதை கொடுத்து கண்டிப்பாக கட்சியைப் பதிவு செய்தே தீருவோம். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்துஇதுவரை முடிவு செய்யவில்லை. அது அருப்புக்கோட்டையா இல்லையா என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது.
நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரலாம். அதில் தப்பே இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சிஆரம்பிக்கலாம், கட்சியில் சேரலாம் என்றார் விஜயகாந்த்