இலங்கை கடற்படையின் வழிப்பறிக் கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள், மீனவர்களின் கைக் கடிகாரங்கள்ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் 30 படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இரவில் கச்சத்தீவு அருகேமீன்பிடித்த அவர்கள் இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் கரை திரும்ப தயாராகிக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு வந்து அவர்கைளசுற்றி வளைத்தனர். பின்னர் தமிழக மீனவர்களைத் தாக்கிய கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும்மீனவர்கள் அணிந்திருந்த கைக் கடிகாரங்களைப் பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியுள்ளனர்.

தட்டுத்தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸில் புகார்கொடுத்துள்ளனர்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் போல மீனவர்களின் மீன்கள், கைக் கடிகாரங்களை இலங்கை கடற்படையினர் பறித்துச்சென்றுள்ளது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+