For Daily Alerts
Just In
சேதுவால் ஆபத்து!!: அணு விஞ்ஞானி எச்சரிக்கை
சென்னை:
சுனாமியை ஏற்படுத்திய பயங்கர கடலடி பூகம்பத்துக்குப் பின் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்களால், சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகவிஞ்ஞானி கேசவன் கூறியுள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் சுனாமிக்குப் பிறகு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
இதில் பேசிய கேசவன், சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு அந்தமான் தீவில் நில மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தெற்கு அந்தமான் தீவில் நிலப்பகுதி கடலில் மூழ்கத்தொடங்கியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது இந்தியாவுக்கு,குறிப்பாக தமிழகத்திற்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றார் கேசவன்.
Story first published: Tuesday, December 27, 2005, 5:30 [IST]