For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் பெயரை சொல்லி ஸ்வாஹா முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள மிகப் பிரபலமான கேம்பகோலா மைதானத்தை அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆக்கிரமிக்க வந்தகும்பல் கவர்னரின் தலையீட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளது.

25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மைதானம் லீ மெரிடியன் ஹோட்டல்ஸ் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. கடந்த 40ஆண்டுகளாக இந்த நிலமும் உள்ளே இருக்கும் பங்களாவும் இவர்களிடம் உள்ளது.

இங்கு அவ்வப்போது சினிமா சூட்டிங்குகள் நடப்பதுண்டு. பாபா படத்தின் பெரும்பகுதி இங்கு தான் எடுக்கப்பட்டது.

இந் நிலையில் கடந்த சனிக்கிழமை பெரம்பூரைச் சேர்ந்த மதியழகன் என்பவன் 50 பேர் கொண்ட தனது படை, பரிவாரத்துடன்இங்கு வந்துள்ளான். புல்டோசருடன் வந்த அந்தக் கும்பல் மைதானத்தின் காம்பவுண்ட் சுவரை இடிக்க ஆரம்பித்தது.

இதையடுத்து மைதானத்தில் இருந்த காவலாளிகள் அவர்களைத் தடுத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய மதியழகன், இதுஎன் நிலம். எட்டையபுரம் மகாராஜாவிடம் நான் தான் வாங்கினேன். என்னைத் தடுத்தால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியுள்ளான்.

அமைச்சர் பெயரைச் சொல்லி இக் கும்பல் மிரட்டியதையடுத்து டெல்லியில் உள்ள மைதானத்தின் உரிமையாளருக்குத் தகவல்தந்தனர் காவலாளிகள். இந்தியாவின் முன்னணி ஹோட்டல் தொழிலதிபர்களில் ஒருவரான அவர் தனது தொடர்புகளைப்பயன்படுத்தி ஆளுநர் பர்னாலாவிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல்துறையிடம் பேச, கிண்டி போலீசார் அலறிக் கொண்டு ஓடிப் போய்மதியழகன் மற்றும் அவனுடைய 15 அடியாட்களைக் கைது செய்துள்ளனர்.

இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்தக் கும்பலை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து இந்த 15ம் உள்ளே தள்ளப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X