For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை மாநகராட்சிக்கு உருண்டபடியே வந்த கவுன்சிலர்கள்! படுத்தபடியே பேட்டி!!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததைக் கண்டித்தும், சாலைகளைசீரமைக்காததைக் கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் உருண்டபடியே வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. அப்போத இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தரையில் உருண்டபடியே கூட்டத்திற்கு வந்தனர்.

மாநிகராட்சி நுழைவாயிலிலிருந்து உருண்டு வந்த அவர்கள் கூட்டம் நடந்த அரங்கத்திற்குள்ளும் உருண்டபடியே நுழைந்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, படுத்தபடியே அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை அள்ளித் தருகிறார்கள். ஆனால் மதுரையை மட்டும்மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடேத்துகிறார்கள்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரிவர நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.சேதமடைந்த சாலைகள் சீர்படுத்தப்படவில்லை. இதைக் கண்டித்தே இப்போராட்டம் என்று தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சியில் திமுக தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X