திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
திருப்பதி:
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
நாட்டின் பல இடங்களிலும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பைகடுமையாக்கியுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.கோயில் முகப்பு வாயிலின் முன்பு பாதுகாப்புக்காக நான்கரை அடி உயரத்தில் புல்லட் புரூப் கேபின்கள் அமைக்கவும், ஆயுதம்தாங்கிய போலீசாரை காவலில் வைத்து தீவிரமாக கண்காணிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தற்போது நீண்ட கியூவில் நின்று கோயிலுக்குள் செல்லும் பக்தர்களின் பொருட்கள் அடங்கிய பைகளும் ஸ்கேன் மூலம் சோதனைசெய்யப்படுகின்றன. மேலும், கோயிலின் உள்ளே லட்டு தயாரிக்கும் இடத்திற்கு அனுப்பப்படும் பொருட்களையும் சோதனைசெய்ய 20 லட்சம் ரூபாய் செலவில் மற்றுமொரு பேக்கேஜ் ஸ்கேனர் ஏற்படுத்தவும் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
கீழ் திருப்பதியில் அலிபிரி டோல்கேட்டிலும் மோப்ப நாய்களின் மூலம் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.