ஜெ. கட்டிய பாலங்கள் இடிந்ததே..: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கரூர் அமராவதி பாலம் தொடர்பாக என் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று திமுக தலைவர்கருணாநதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜெயலலிதாவின் வழக்கை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம். இதே ஜெயலலிதா ஆட்சியில் கடலூர் சிங்காரத்தோப்பில் ரூ. 6கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது. அதற்கு யார் விசாரணைக் கமிஷன் வைப்பது?. யார் மீது வழக்குப் போடுவது?

நாகை அருகே அக்கரைப்பேட்டையில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் கல்லார் ஆற்றுவெள்ளத்தில் கரைந்து காணாமல் போனதாக செய்திகள் வந்தது. அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, ஐந்துமாதங்களில் அப்பாலம் மீண்டும் கட்டப்படும் என்றார். ஆனல் இன்னும் அதற்குரிய மதிப்பீடு கூட செய்யப்படவில்லை.

அதேபோல திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. ராமநாதபுரம் அருகே தொழுவலூர்-காரையேந்தல் பாலமும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாதநிலையிலேயே இடிந்து உடைந்ததாக செய்திகள் வந்தன. இவற்றுக்கெல்லாம் யார் மீது விசாரணைக் கமிஷன் வைப்பது?

எனவே என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை அரசியல் உள்நோக்கத்துடன், பழிவாங்கும் செயலாகவே கருத வேண்டும். தேர்தல்நேரத்தில் திமுகவுக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கைபோட்டுள்ளார்கள்.

எனது போனும் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஜெயலலிதா சொல்லியுள்ளது, மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத்தான்.அமர்சிங்கின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்.

பாலாற்றில் அணை கட்டப்படுவதை எதிர்த்து ஜெயலலிதா திடீரென குரல் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு முன்பாகவேபாமக, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு காட்டி விட்டன. ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அறிக்கைவெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் சேரலாம். இன்னும் அதுகுறித்துப் பேசும் நேரம் வரவில்லை. தொகுதிப் பங்கீடுதொடர்பாகவும் இன்னும் பேசவில்லை. நாங்கள் கூடிப் பேசினாலே தொகுதி உடன்பாட்டுக்காகத்தான் என்று அர்த்தமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இன்னும் திட்டவட்டமான முடிவு எதையும்எடுக்கவில்லை. எல்லாவற்றையும் யோசித்தே முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+