அதிமுக செயற்குழு, பொதுக்குழு தேதி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் வரும் 29ம் தேதி நடக்கும்என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந் நிலையில் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அறிவித்த ஜனவரி 29ம் தேதிக்குப் பதில் பிப்ரவரி4ம் தேதி கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறும்.
அன்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனி விஜய சேஷ மஹாலில் இரு கூட்டங்களும் நடைபெறும். உறுப்பினர்கள்தவறாமல் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பொதுக் குழுவில் பஞ்சாயத்து, மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 1,500 பேர் உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்நிறைவேற்றப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications