தூத்துக்குடி: புலிகள் ஊடுறுவலை தடுக்க சோதனை சாவடிகள்
தூத்துக்குடி:
இலங்கையில் நிலவி வரும் ஸ்திரமில்லாத நிலையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலைப் புலிகள்ஊடுறுவலைத் தடுக்கும் முகமாக 5 புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அவ்வப்போதுசண்டை நடந்து வருகிறது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக வந்துள்ள நார்வே தூதுக்குழுவின் முகாம் மீதும்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகதிகள்வருகை தொடங்கியிருப்பதாலும், அகதிகள் என்ற போர்வையில் போராளிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காகவும்கடற்படையும், கடலோரப் பாதுகாப்புப் படையும் கூட்டு ரோந்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளிட்டபோராளிகள் ஊடுறுவலைத் தடுக்கும் விதமாக ஆறுமுகநேரி, வேம்பார், வைப்பார், வெள்ளப்பட்டி, பெரியதாழை ஆகியஐந்து கடலோரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலோரக் காவல் படையும், காவல்துறையும் இணைந்து இங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.