மகாபலிபுரம் அருகே தகவல் தொழில் நுட்ப பூங்கா: கமல்நாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் சார்பில் மகாபலிபுரம் அருகே 410 ஏக்கர் பரப்பளவில் கடல் சார்ந்த தொழில் பூங்கா மற்றும் தகவல் தொழில் நுட்பபூங்கா ஆகியவை மிக விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட இந்திய அறிவுசார் சொத்துரிமை கட்டட திறப்பு விழா நடந்தது. மத்தியவர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் மத்திய அமைச்சர் பேசியதாவது:

தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி தொடருமேயானால் அடுத்த சில ஆண்டுகளில் உலகமே இந்தியாவின் பொருளாதாரத்தைசார்ந்து இருக்கும். ஆண்டுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் நாட்டின் வர்த்தகம் பெருகியுள்ளது. இது மேலும்பெருகும்.

இந்தியாவில் நிலவும் அமைதி, தொழில் செய்வதற்கான சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டைச் சேர்ந்த பலமுதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் பல திட்டங்கள் செய்யப்படுகின்றன.

சென்னையில் இருந்து 28 கிமீ தொலைவில், மகாபலிபுரம் அருகே 300 ஏக்கர் பரப்பில் கடல்சார் தொழில் பூங்கா ஒன்றுஅமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில் நுட்ப பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை சமீபத்தில் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள்துவங்க உள்ளன என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+