நீதிமன்ற அவமதிப்பு: தாசில்தாரைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சென்னை அம்பத்தூர் தாசில்தாரை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வில்லிவாக்கம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மற்றும் ராமலிங்கம். இவர்களது நிலத்திற்கு அருகே உள்ள அரசுபுறம்போக்கு நிலத்தில் ஏகப்பட்ட பேர் ஆக்கிரமித்தனர். இதனால் இவர்களது நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து இருவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட அம்பத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதையடுத்து தாசில்தார் மீது ராமலிங்கம், ராஜ்குமாரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் அம்பத்தூர் தாசில்தார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஉத்தரவிட்டிருந்தார். ஆனால் தாசில்தார் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டார்.