பிரபல ஜவுளிக்கடை அதிபர் சாலை விபத்தில் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

தமிழகத்தின் மிகப் பிரபலமான ஆர்.எம்.கே.வி. ஜவுளிக்கடையின் அதிபர் விஸ்வநாதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிஅருகே நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர்.

சென்னை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஆர்.எம்.கே.வி. இந்த நிறுவனத்தின் அதிபரான விஸ்வநாதன்,அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றனர்.

மதுரையிலிருந்து கார் மூலம் நெல்லைக்கு பயணித்தனர். கார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சத்திரப்பட்டிவிலக்கு என்ற இடத்தில் வந்தபோது சாலையின் ஓரமாக ஒரு டிராக்டர் பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.

கடும் பனி மூட்டம் காரணமாக டிராக்டர் நிற்பதை கார் டிரைவரால் கவனிக்க முடியவில்லை.

வேகமாக வந்த கார், டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணித்த விஸ்வநாதன், அவரது மனைவி தனலட்சுமி,தம்பி சிவக்குமார், அவரது மனைவி ஹேமா, அவரது மகன் ஸ்ரீராம், கார் டிரைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.

அதேபோல டிராக்டரில் அமர்ந்திருந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் நெல்லை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன்மரணம் அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+