வேட்பாளர் தேர்வு: தேர்தல் பணியில் அதிமுக மும்முரம்
சென்னை:
அதிமுக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வாங்கும் பணியைதுவங்கியுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர் கொள்வதற்கு வழக்கம் போல் அதிமுக மின்னல் வேகத்தில் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளில்முதல் கட்டமாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பம் வாங்கும் பணியை அதிமுக முதலில் துவக்கி விட்டது.தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கும் அதிமுக தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் முதற்கட்டமாக கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் வரும் 4ம் தேதி சென்னையில் கட்சி பொதுக்குழு - செயற் குழு கூட்டம்நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி முதல்வர் பேசஉள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையாவது:
வருகிற தமிழக, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும்கட்சியினரிடம் இருந்து அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் விண்ணப்ப படிவங்கள் பெறப்படும்.
பிப்ரவரி முதல் தேதியன்று காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 15ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரியகட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications