For Daily Alerts
Just In
திருப்பரங்குன்றம் தைப்பூசத் திருவிழா தொடங்கியது
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தை மாதத் திருவிழாக்களில் தைப்பூரம் அல்லது பூசத் திருவிழா விமரிசையானது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10 நாள்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், தெய்வானை சகிதம் அழைத்து வரப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைத் தரிசித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது.
Comments
Story first published: Sunday, January 29, 2006, 5:30 [IST]