தொகுதிகள்: திமுக மீது கம்யூ. கட்சிகள் அதிருப்தி
சென்னை:
வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவை வலியுறுத்தியுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தலில் திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கடந்த அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இந்த தேர்தலில் இந்த கட்சிகளுக்கு தலா 6 இடங்களை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதனை ஏற்ககம்யூனிஸ்ட் கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதிமுக ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதல் இடம் வேண்டும் என்று கூறிஉள்ளன.
இது குறித்து மதுரையில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன், தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுகவின்அணுகுமுறையை விமர்சித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் கம்யூனிஸ்ட்கூடிப் பேசி தனி முடிவெடுக்கும் என்று எச்சரித்தார்.
இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியனும் திமுகவின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications