For Daily Alerts
Just In
அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது-ராமதாஸ்
திண்டிவனம்:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாககூறியுள்ளார்.
திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். ஒரு இடம் கூட அதற்கு கிடைக்காது. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால், ஏதோ மிகவும் பலத்துடன் இருப்பது மாதிரி உளவுப் பிரிவு போலீஸ் மூலமாக ஒரு மாயையை ஏற்படுத்தமுயல்கிறார்கள்.
அதிமுக ஆட்சியால் தமிழகம் 40 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்டது தான் உண்மை. தமிழகத்தையே இந்த ஆட்சி சீரழித்துவிட்டது.
மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முனைப்பு காட்டுவதில் மர்மம் (ஊழல்) உள்ளது.
தேர்தல் தொடர்பாக விவாதிக்க பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் ராமதாஸ்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 5:30 [IST]