கார்த்திக்கை நம்பி ஏமாந்தேன்: நடிகர் செந்தில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Senthil receiving ADMK membership card from Jayalalitha

நடிகர் கார்த்திக் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று நம்பியிருந்தேன். ஆனால் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசியதுஎனக்கு பெரும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது என்று அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

தேவர் சமூகத்தைச் சேர்ந்த காமெடி நடிகர் செந்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.சமீபகாலமாக தனது சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்கை ஆதரித்து வந்த செந்தில் முன்னதாக சிறிது காலம் விஜய்காந்தை ஆதரித்துவந்தார்.

இந் நிலையில் அதிமுகவுடன்தான் கார்த்திக் கூட்டணி வைப்பார் என்று செந்தில் கூறி வந்தார். ஆனால் கார்த்திக் கருணாநிதியைசந்தித்ததால் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறி சட்டுப்புட்டென்று அதிமுகவில் போய் சேர்ந்து விட்டார்.

இது குறித்துக் கூறுகையில், நான் ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுக அனுதாபிதான். முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு நிறையமதிப்பும், மரியாதையும் உண்டு. அதனால்தான் கார்த்திக்கை அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமாறு கூறி வந்தேன். அவரும்சேருவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் கருணாநிதியை சந்தித்து என்னைப் போன்ற பலருக்கு அவர் அதிர்ச்சி அளித்துவிட்டார்.

உண்மையில் நான் கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரத்தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் கார்த்திக்கின் போக்கினால்அதிருப்தி அடைந்துதான் அதிமுகவில் சேர்ந்து விட்டேன். திமுகவுடன் கூட்டணி வைக்கும் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேருவதுநரகத்தில் சேருவது போல, அதனால்தான் சொர்க்கமாக திகழும் அதிமுகவில் சேர்ந்துள்ளேன்.

கார்த்திக் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவரை சுற்றியிருப்பவர்கள் அவரை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுததான் கருணாநிதியை அவர் சந்தித்திருக்கக் கூடும். அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டுவிட்டது. உண்மையில், தலைவர் பதவியை ஏற்றதும் அவர் முதலில் ஜெயலலிதாவைத்தான் சந்தித்திருக்க வேண்டும்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் கார்த்திக்குக்கு மதிப்பு. அவர் வருவார் என்றுதான் நான் நம்புகிறேன். திமுகவுடன்கூட்டணி வைத்தால் தோல்வியைத்தான் அவர் சந்திக்க நேரிடும்.

கார்த்திக் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி உடையும் வாய்ப்பே இல்லை. அது எப்போதுமே அம்மா பக்கம்தான். இதை கார்த்திக்புரிந்து கொள்ள வேண்டும, புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

அதிமுகவில் என்னை அம்மா சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது. முதலில் திருச்செந்தூர் போய் முருகனை தரிசிக்கஉள்ளேன். பின்னர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். மிகக் கடுமையாக நான் பிரசாரம் செய்யவுள்ளேன்.

அதேசமயம் யாரையும் தாக்கிப் பேச மாட்டேன். முதல் பிரசாரக் கூட்டம் வட சென்னையில் நடக்கிறது என்றார் செந்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+