For Daily Alerts
Just In
மோனோ ரயில்: டெண்டர் விட தடை இல்லை
சென்னை:
மோனோ ரயில் திட்டம் தொடர்பாக டெண்டர் விட தடை இல்லை, அதே சமயம் அதன் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தைஅமலாக்கினால் சென்னை மக்களுக்கு பலன் கிடைக்காது என்று கூறி அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி பாமக சார்பில்உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மோனோ ரயில் திட்டம் தொடர்பாக ஒப்பந்தப்புள்ளிகள் கோர தடை விதிக்க முடியாது என்றுஅறிவித்தனர். அதே சமயம், டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய ரயில்வே, சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 5:30 [IST]