குஜராத், பிகார், பாக், ஜப்பானில் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வட மாநிலங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் இன்று காலை 6.24 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.4 புள்ளியாக பதிவானது.இதனால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.
இதே போல சிக்கிம், பிகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் காலை 7.28 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 5.3 புள்ளியாக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை.
மேலும் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெஷாவர் உள்பட 5 இடங்களிலும், ஜப்பானின் வடக்கு பகுதியிலும், தலைநகர்டோக்கியோவிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டன. உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் 5.9 புள்ளியாகபதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications