பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல்பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன்படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.

மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே,மீனாவை அக்கும்பல் கற்பழித்துள்ளது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த மாணவர் அனந்து மற்றும் மீனாவை சக மாணவர்கள் அங்கிருந்து மீட்டு கல்லூரி விடுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கற்பழிப்பு சம்பவத்தில் முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் அடங்கியுள்ளதால் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்யத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரபலமான ஜிப்மர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது மருத்துவக் கல்லூரியிலும்,புதுவையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+