போலீஸ் பாதுகாப்புடன் மகன் திருமணத்தில் அப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

Appuதஞ்சையில் நடந்த தனது மகன் திருமணத்தில் சங்கர்ராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்பு கலந்து கொண்டார்.

இத் திருமணத்தில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கடலூர்மத்திய சிறையில் இருந்து தஞ்சை கொண்டு வரப்பட்டார்.

தனது மகன் சரத்தின் திருமணத்தில் கலந்து கொள்ள தஞ்சை செல்ல ஜாமீனில் விட வேண்டும் என்று கோரி அவர்உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் சிறையிலிருந்து அவரைவிடுவித்து பாதுகாப்புடன் தஞ்சைக்கு அழைத்துச் சென்று திருமணம் முடிந்ததும் மீண்டும் கடலூர் சிறையில் அடைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.

இதன்படி வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கடலூர் சிறையிலிருந்து அப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை அப்பு சென்றடைந்தார்.

பின்னர் காலை 7 மணியளவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மகன் சரத், மருமகள் ஷாலினியை அப்புவாழ்த்தினார்.

பின்னர் திருமண விருந்தை அவர் ருசி பார்த்தார். பிறகு மதியத்திற்கு மேல் அங்கிருந்து புறப்பட்டார் அப்பு. இரவு அவர் கடலூர்சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

திருமண மேடையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரத்துடன் கலக்கிய அப்புவுக்கு இரு புறமும் போலீசார்நின்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+