யாருடன் கூட்டணி?: 15ம் தேதி திருமா. அறிவிப்பு
வேலூர்:
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்பதை வரும் 15ம் தேதி தெரிவிப்பதாகஅக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருந்தது. மங்களூர் (தனி) தொகுதிஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திமுககூட்டணியில் இருந்து விலகியவர் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.இந்தத் தேர்தலில் இதுவரை எந்தக் கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை. பாமகவுடன் மட்டும் திருமாவளவன் மிகமிக நெருக்கமாக உள்ளார். திமுக கூட்டணியில் திருமாவளவனை சேர்க்க பாமக நிறுவனர் ராமதாஸ் கருணாநதியை, தொடர்ந்துவலியுறுத்தி வருகிறார். ஆனால் திருமாவளவனை சேர்ப்பது குறித்து இதுவரை கருணாநிதி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதனால் அதிமுகவுடன் திருமாவளவன் கூட்டணி அமைக்கக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும், கடைசிவரைபொருத்திருந்து பார்ப்பது அதன் பிறகு முடிவெடுப்பது என்ற எண்ணத்தில் திருமாவளவன் காத்துள்ளார்.
இந் நிலையில் வேலூர் வந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 120 தொகுதிகளில் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. தனித்து போட்டியிட்டால் 10 தொகுதிகளைவெல்வோம்.
எங்களது அமைப்பின் மையக் குழுக் கூட்டம் வருகிற 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் யாருடன்கூட்டணி வைப்பது, தேர்தல் அணுகுமுறை என்ன என்பதை முடிவு செய்ய உள்ளோம்.
14ம் தேதி சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தவுள்ளோம். அதில் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி (டாக்டர்ராமதாஸ்), கி.வீரமணி, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
காவிரி ஆற்றை கர்நாடகம் ஆக்கிரமித்தது, பவானி ஆற்றை கேரளா ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது பாலாறு மற்றும் பென்னைஆற்றை ஆந்திர அரசு கபளீகரம் செய்கிறது. அண்டை மாநிலங்களால் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது என்றார்திருமாவளவன்.