அதிமுக டிக்கெட்: 19 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை:
![]() |
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டிய கடைசி தேதி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, கேரள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து கடந்த 1ம் தேதி தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. நேற்றுடன் விண்ணப்பங்களைக் கொடுக்க கடைசி நாளாகும்.
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்ததால், விண்ணப்பங்களை வாங்கியவர்கள் திணறிப் போனார்கள். மேலும், அதிக அளவில் மனுக்கள் வந்தவண்ணம் இருந்ததால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு கால அவகாசத்தை நீட்டித்துள்ளார்.
![]() |
இதன்படி வரும் 19ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் என அவர் அறிக்கை மூலம் தெவித்துள்ளார்.
இதற்கிடையே, கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நேற்று இரவு நெடுநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் விண்ணப்பங்களைக் கொடுத்துச் சென்றனர்.
நேற்று அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் (பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிக்காக விண்ணப்பித்துள்ளார்), தளவாய் சுந்தரம், வைத்திலிங்கம், நயினார் நாகேந்திரன், விஸ்வநாதன், வளர்மதி, கருப்பசாமி, காளிமுத்து (திருப்பரங்குன்றம், திருமங்கலம்) உள்ளிட்ட ஏராளமானோர் சார்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
இதுவரை ரூ. 11 கோடி அளவுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலாகியுள்ளது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், வசூலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications