விண்ணப்பம்: அவகாசத்தை நீட்டித்த விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விண்ணப்பம்அளிப்பதற்கான கால அவகாசத்தை விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடகழகம் நீட்டித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்துதே.மு.தி.க. விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது. நேற்றுடன் விண்ணப்பம்அளிப்பதற்கான அவகாசம் முடிவடைந்தது.இந் நிலையில் தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளதால் காலஅவகாசத்தை நீட்டித்து தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27ம் தேதி வரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். அன்றுமாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை போட்டியிட சீட் கேட்டு 2,800 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.விண்ணப்ப மனு கட்டணமாக ரூ. 2.80 கோடி வசூலாகியுள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனபொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications