ஜார்ஜ் புஷ் நாளை இந்தியா வருகை
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நாளை இந்தியா வருகிறார்.
இந்தியா, பாகிஸ்தானில் ஒரு வார கால பயணம் மேற்கொள்ள இருக்கும் புஷ், சர்வதேச விவகாரங்கள்,தீவிரவாத ஒழிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.தீவிரவாத ஒழிப்பு, இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்தி கமிஷனின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது, இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம், இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போர் விமானங்களைவழங்குவது, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட ஆய்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவிவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் புஷ் விவாதிக்கவுள்ளார்.
ஹைதராபத்துக்குச் செல்லவிருக்கும் புஷ் அங்கு சாப்ட்வேர் நிறுவன அதிபர்களிடையே உரையாற்றவுள்ளார்.
புஷ்ஷின் வருகையையொட்டி டெல்லியிலும் ஹைதராபாத்திலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் அவர் தங்கப் போகும் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டல் முழுக்க முழுக்க அமெரிக்க பாதுகாப்புப்படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.
அந்த ஹோட்டலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அனைத்து தளங்களும் அறைகளும் அமெரிக்கஅதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தரப்பட்டுவிட்டன.
அதே போல டெல்லி சர்வதேச விமான நிலையத்திலும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
புஷ்ஷின் விமானம் தரையிறங்கும்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்து எந்த விமானமும் கிளம்பாது.அதே போல விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வானிலேயே சுற்றிவிட்டு பின்னர் தான்தரையிறங்க அனுமதிக்கப்படும்.
புஷ்சுடன் அவரது மனைவியும் வருகிறார். முதல் கட்டமாக இந்தியாவில் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்பாகிஸ்தான் செல்கிறார்.
புஷ்சின் வருகையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புஷ்சுக்கு எதிராகஇடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications