For Daily Alerts
Just In
இதோ.. ஜெவின் இன்னொரு தேர்தல் சலுகை
சென்னை:
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்வி உதவித் தொகைவழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் இரவு, பகலாக தினந்தோறும் ஏதாவது ஒரு சலுகை,அறிவிப்பை வெளியிட்டபடியே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஜெயலலிதா அறிவித்த சலுகை:
விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.37 கோடி வேளாண் பெரு மக்களின் நலனுக்காக எனது அரசு உழவர்பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
இத் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ தேர்வு எழுதிய விவசாயிகள் வீட்டு மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 4 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைவர்.இதனால் அரசுக்கு கூடுதலாக ரூய 50 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதால் இனிமேல் சலுகைகளை, புதிய திட்டங்களை அறிவிக்க இயலாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, March 1, 2006, 5:30 [IST]