தேமுதிகவில் சீட் கோரும் 3,965 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட்கேட்டு 3,965 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 238 பேர் பெண்கள் ஆவர்.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேசிய முற்போக்கு திராவிடகழகத்தினர் கடந்த 2ம் தேதியிலிருந்து விண்ணப்பங்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடுத்து வந்தனர்.27ம் தேதியுடன் விண்ணப்பங்களை கொடுப்பதற்கான அவகாசம் முடிந்தது.
மொத்தம் 3,965 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் பொதுத் தொகுதிகளைக் கேட்டு 3,195 பேரும்,ரிசர்வ் தொகுதிகளைக் கோரி 532 பேரும் விண்ணப்பித்துள்ளனர். புதுவையில் சீட் கேட்டு 238 விண்ணப்பங்கள்வந்துள்ளன.
விஜயகாந்த்துக்காக சீட் கேட்டு 230 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. மொத்தம் 356 பெண்கள் சீட் கேட்டுவிண்ணப்பம் அளித்துள்ளனர் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் அறிக்கையொன்றில்குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications