For Daily Alerts
Just In
ஜெ குறித்து கட்டுரை-நக்கீரனுக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா குறித்து கட்டுரைகள், செய்திகளை வெளியிட நக்கீரன் வாரஇதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தங்களது நன் மதிப்பை பாதிக்கும் வகையில் நக்கீரனில் தொடர்ந்து கட்டுரைகள், செய்திகள்வெளியிடப்படுவதாகவும், இதற்குத் தடை விதிக்கக் கோரியும் ஜெயலலிதா, சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். பின்னர், மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப்பார்க்கும்போது நக்கீரன் இதழுக்கு இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளது.
எனவே நக்கீரன் மற்றும் அவர்கள் வெளியிடும் சிறப்பு பதிப்பு மற்றும் எந்தவித வெளியீட்டிலும், ஜெயலலிதா,சசிகலா குறித்த கட்டுரைகள், சிறப்பு செய்திகள், கார்ட்டூன் போன்றவற்றை, மனுதாரர்கள் நன்மதிப்பை பாதிக்கும்வகையில் வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதாக தீர்ப்பளித்தர்.
Comments
Story first published: Friday, March 17, 2006, 5:30 [IST]