For Daily Alerts
Just In
பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்
சென்னை:
பிளஸ் டூ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன. 5,27,000மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.மொத்தம் 42 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. ஏப்ரல் 15க்குள் இப்பணிகள் முடிவடையும்என்று தெரிகிறது.
இந்த ஆண்டு இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததாக மாணவ, மாணவியர்,ஆசியர்கள், பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இயற்பியல் விடைத்தாள் திருத்தும்போது மதிப்பெண்களில் கருணை காட்டப்படும் எனத் தெரிகிறது. மேமாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
Comments
Story first published: Friday, March 17, 2006, 5:30 [IST]