"போதை டாக்டரால் குழந்தை பலி?
திருவண்ணாமலை:
குடிபோதையில் டாக்டர் சிகிச்சையளித்தால் 5 மாத குழந்தை இறந்ததாக கூறிகுழந்தையின் தாய் உறவினர்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோரி மேட்டுத்தெருவை சேர்ந்த தம்பதிகள்சேகர்-கவிதா (22). இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 மாத குழந்தை இருந்தது.நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார்மருத்துவமனைக்கு குழந்தையை கவிதா தூக்கி சென்றார்.
அங்கு டாக்டர் சிகிச்சையளித்து ஊசி போட்டவுடன் குழந்தை மயங்கி விழுந்ததாககூறப்படுகிறது. இதையடுத்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கவிதாஎடுத்துச்சென்றார். ஆனால் அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.
தனியார் டாக்டர் குடிபோதையில் ஊசிபோட்டதால் தான் குழந்தை இறந்ததாக கவிதாகூறுகிறார். குழந்தை இறந்ததைகூறி கவிதா, தனியார் டாக்டரிடம் தகராறு செய்தார்.
இது பற்றி செங்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த போதும், போலீசார் புகாரைபதிவு செய்யாமல் கவிதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கவிதாவும், அவரது உறவிர்களும் நேற்று திருவண்ணாமலை கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கலெக்டர் சம்யபிரத சாஹூவியிடம் குழந்தையின் சடலத்தை காட்டி, தனியார் டாக்டர்மீதும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிதா மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாககூறினார்.