For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் காவிரி துரோகம்-ஜெ பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

திருவாரூர்:

காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்.காவிரியில் நமது உரிமையைப் பெறும் வரை அதிமுக அரசு தீவிரமாக பாடுபடும்என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

திருவாரூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா பேசுகையில், காவிரி நீர்ப்பிரச்சினையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து எனதுதலைமையிலான அரசு போராடி வருகிறது.

காவிரி நிதி நீர்ப் பிரச்சினையில் தமிழக விவசாயிகள் நலனுக்கான அனைத்துநடவடிக்கைகளையும் நான் எப்போதும் எடுத்து வருகிறேன்.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்த இறுதித் தீர்ப்பைமுழுமையாக நடைமுறைப்படுத்தும் வண்ணம் அனைத்து அதிகாரம் கொண்ட காவிரிபடுகை ஆணையம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தக் கோரி ஒரு வரைவுத்திட்டத்தை அதிமுக அரசு நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட மறுத்தால், தானே தண்ணீர்திறந்து விடக் கூடிய வகையில் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும்என்று நாம் வற்புறுத்தி உள்ளோம்.

காவிரி விவசாயிகளுக்கு இதுவரை துரோகமே செய்து வந்துள்ள கருணாநிதி,இப்போது தனது தேர்தல் அறிக்கையில் காவிரி பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை, ஏன்ஒரு வரி கூட குறிப்பிடவில்லை.

காவிரிப் பிரச்சினையை கருணாநிதி சுத்தமாக கை கழுவி விட்டார். காவிரி நீர் குடித்துவளர்ந்த கருணாநிதி விவசாயிகளின் ஜீவாராதப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைபேசுவதைக் கூட பாவம் என்று எண்ணுகிறார் போலும்!.

ஆனால் இந்தப் பிரச்சினையில் நமது உரிமையில் இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க நான் இசைய மாட்டேன். அதிமுக அரசும் அதற்கு ஒருபோதும் சம்மதிக்காது.நிச்சயம் நாம் இறுதி வெற்றியைப் பெற்றே தீருவோம் என்றார் ஜெயலலிதா.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X