பகுஜன் சமாஜ் சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி
மதுரை:
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள்போட்டியிடுவர் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முதலில் 27 வேட்பாளர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் கிருஷ்ணசாமிஒட்டபிடாரத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்நதார்.அதன்பின்னர் 60 வேட்பாளர் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.இந்நிலையில் மதுரையில் தனது கட்சியின் 14 வேட்பாளர்கள் அடங்கிய 3வதுபட்டியலை கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
புதிய தமிழகம் வேட்பாளர்கள் விபரம்:
வாசுதேவநல்லூர் - டேனியல் ஆனந்தன்
சங்கரன்கோவில் - பொன்னுச்சாமி
வால்பாறை - சுப்பையா
நாகப்பட்டினம் - பன்னீர் செல்வம்
ராஜபாளையம் - காளிமுத்து
உளுந்தூர்பேட்டை - ராஜவேல்
முசிறி - கணேஷ்
கடலூர் - அமுதன்
பெரம்பலூர் - ராஜபாண்டியன்
திருச்சி 2 - இளங்கோ
சேலம் - செல்லம்
கோவை மேற்கு - கிருஷ்ணன்
கடலாடி - சீரா டார்வின்
வரகூர் - சுதந்திரம்
பின்னர் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், வருகிற தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து நாங்கள் போட்டியிடுகிறோம். மொத்தம் 120தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் 114 தொகுதிகளில்போட்டியிடுகிறது.
அனைத்து வேட்பாளர்களும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானைசின்னத்திலேயே போட்டியிடுவார்கள். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிதமிழகத்தில் 7 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார் என்றார் கிருஷ்ணசாமி.
தேர்தலுக்குப் பின்னர் புதிய தமிழகத்தை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைத்து,அக்கட்சியின் தலைவராக கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார் என்பதை ஏற்கனவேதெரிவித்திருந்தோம் என்பது நினைவிருக்கலாம்.
INDIA NEWS |