திருமாவை ஒதுக்கிய ஜெ- சிறுத்தைகள் கோபம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனுடன் ஒரே மேடையில்ஏறினால் முக்குலத்தோர் சமூகத்தினரின் ஒரு பகுதி வாக்குகளை இழக்கவேண்டியிருக்கும் என்ற உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து மதுரை கூட்டத்தைரத்து செய்த முதல்வர் ஜெயலலிதா மீது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின்தொண்டர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருமாவுடன் மதுரையில் இன்றுஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வகையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், இதனால் அதிமுகவின முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்தோர் வாக்குகள்சிதறலாம் என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிமுக தலைமை இக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டது.
தென் மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதியையும்ஒதுக்கவில்லை. இந் நிலையில் திருமாவளவனுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்செய்வதையும் தவிர்த்துள்ளார் ஜெயலலிதா.
இது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications