ஜெ. அலையில் சிக்கிய சீமான்!
சின்னமனூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள்மத்தியில் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் சீமான் சிக்கிக் கொண்டார். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்தில் தனது பிரசாரத்தைத்தொடங்கினார். மாலை ஐந்தரை மணியளவில் அவர் சின்னமனூர் வந்தார். அங்கு பஸ்நிலையம் அருகே வேனை நிறுத்தி வேனிலிருந்தபடி பேசத் தொடங்கினார்.ஜெயலலிதாவைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் பெரும் திரளான மக்கள்கூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனம் எதுவும் போக முடியாத நிலைஇருந்தது.
இந் நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும்திமக வேட்பாளர் சீமான் கம்பத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் வழியில்சின்னமனூர் வந்தார்.
அதிமுக தொண்டர்கள் கூட்டத்தைத் தாண்டி அவர் செல்ல முடியவில்லை, அவரதுகாரைச் சுற்றிலும் ஏராளமான அதிமுகவினர் திரளாக கூடி நின்றனர்.
இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிக்கிக் கொண்டார் சீமான். உடனடியாக போலீஸார்விரைந்து வந்து சீமானுடைய காரை அருகில் இருந்த தெருவுக்குள் கொண்டு சென்றுபாதுகாப்பாக நிறுத்தினர்.
ஜெயலலிதா தனது பேச்சை முடித்துக் கொண்டு கம்பம் கிளம்பிய பின்னர்தான்சீமானால் அங்கிருந்து நகர முடிந்தது. அதுவரை காரில் அமர்ந்தபடி ஜெயலலிதாவின்பேச்சை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் ஆண்டிப்பட்டி புறப்பட்டுச்சென்றார்.












Click it and Unblock the Notifications