For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபா நோட்ட கண்ணில் காட்டியவர் அம்மா-திருமா

By Staff
Google Oneindia Tamil News

அரூர்:

தமிழக மக்கள் ஓராயிரம் ரூபாயை ஒரே தாளில் பார்த்தது அம்மாவின்ஆட்சியில்தான். இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருமா பேசுகையில், திமுககுடும்பத் தொலைக்காட்சிக்கு அரசாங்க விளம்பரங்கள் மூலம் மட்டும் மாதந்தோறும்கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா? 90 கோடி ரூபாய். வருடத்துக்கு 1,080கோடி ரூபாய் விளம்பர வருவாய் கிடைக்கிறது.

நமக்கெல்லாம் எந்தக் கோடியைத் தெரியும்? தெருக்கோடியை மட்டுமேஅறிந்தவர்கள் நாம். 500 ரூபாய் நோட்டை என்றைக்காவது நாம் நேரில்பார்த்திருக்கிறோமா?.

ஆனால் அம்மா ஆட்சிக்காலத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கூட சாதாரணமாகபார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. (யாருக்கு?) அம்மாவின் ஆட்சி தமிழகத்தின்பொற்கால ஆட்சி.

தங்களது குடும்பத் தொழிலை விஸ்தரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அடிக்கடிவெளிநாட்டுக்குப் போகிறார் தயாநிதி மாறன். மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தைப்பயன்படுத்தி அமெரிக்கா போகிறார், ஜப்பான் போகிறார்.

போகும்போது தனது உடன்பிறப்பு கலாநிதி மாறனையும் அங்கு வர வைத்துவியாபாரத்தை எப்படிப் பெருக்குவது என்பது குறித்து அண்ணனும், தம்பியும் அயல்நாடுகளில் அமர்ந்து ஆற அமர பேசி விவாதித்து குடும்பத் தொழிலை வளர்த்துவருகிறார்கள் என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X