கரடி (கதை) விட்ட பாக்கியராஜ்!
காட்பாடி:
தேர்தல் பிரசாரத்தின்போது தனது பாணியில் கதை சொல்லி இயக்குனர் பாக்கியராஜ்திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
சமீபத்தில் திமுகவில் சேர்ந்துள்ள பாக்கியராஜ் தீவிர தேர்தல் பிரசாரத்தில்இறங்கியுள்ளார். காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமக வேட்பாளர்துரைமுருகனை ஆதரித்து அவர் பஸ் நிலையம் பகுதியில் கொட்டும் மழையில்பிரசாரம் செய்தார்.அப்போது குட்டிக் கதை சொல்லி கூட்டத்தினரை அசத்தினார். அவர் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையலான திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டசாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு ஒருகதை சொல்கிறேன்.
ஒருவன் ரோட்டில் கரடியை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான். மக்களைப்பார்த்து கரடி முடியை வாங்கி நீங்கள் அரைஞான் கயிற்றில் அணிந்து கொண்டால்கோடி கோடியாகப் பணம் வரும் என்றான்.
அதனைக் கேட்ட ஒருவர், ஏம்பா, நாங்கள் கரடி முடியை வாங்கி அணிந்துகொண்டால் கோடி கோடியாகப் பணம் வரும் என்கிறாய், அப்படி என்றால் நீயே கரடிமுடியை பல இடங்களில் அணிந்து கொண்டிருந்தால் கோடீஸ்வரன் ஆகியிருப்பாயே,ஏன் ரோட்டில் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறாய் என்றார்.
அதுபோலத்தான் ஜெயலலிதா ஆட்சியும். ஒழுங்காக ஆட்சி செய்தால் ஏன்சலுகைகளை அறிவிக்கப் போகிறார்கள்?
மக்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நினைத்து கருணாநிதி ஒரு கிலோ அரிசி2 ரூபாய், கலர் டிவி, சமையல் எரிவாயு அடுப்பு, விவசாயிகளுக்கு இலவச நிலம் எனபல நல்லத் திட்டங்களை அறிவித்துக் கொண்டுள்ளார்.
இதை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் பாக்கியராஜ்.












Click it and Unblock the Notifications