For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பாளர் சாவு-கார்த்திக் மீது செயலாளர் பழி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் சாவுக்கு நடிகர் கார்த்திக்தான் காரணம்என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளரும் தீவிரஅதிமுக ஆதரவாளருமான தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக தரப்பிலிருந்து வந்த பல்வேறு வகையான மிரட்டியதையடுத்து செந்தில்தூக்கு போட்டுக் கொண்டு பலியானார்.

இந் நிலையில் கார்த்திக் எதிர்பாளரும், சந்தானத்தின் ஜால்ராவுமான தினகரன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவுடன் கூட்டணி சேர பிரகாசமான வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் தனித்துப் போட்டியிட்டு அதிமுக ஓட்டுக்களைப் பிரிக்க வேண்டும் என்றதிமுகவின் சதித் திட்டத்திற்கு, தன்னுடைய சுய நலத்திற்காக, கட்சியின் எதிர்காலத்தைகுழி தோண்டிப் புதைத்து விட்டு, நாளொரு பேச்சு, நாளொரு நடவடிக்கை என தமிழகஅரசியலில் கேலிப் பொருளாக நடிகர் கார்த்திக் காட்சியளித்து வருகிறார்.

இந் நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆளும் கட்சியிடமிருந்துமிரட்டல் வருவதாக கார்த்திக் தினந்தோறும் பொய்யான குற்றச்சாட்டை திரும்பத்திரும்பக் கூறி வருகிறார்.

அதில் உண்மை எள்ளளவும் இல்லை என்பது என்னைப் போன்ற நீண்ட காலதொண்டர்களுக்குத் தெரியும்.

செந்தில் குடும்பத்தினருக்கு ஆரம்பத்திலிருந்தே பண பலம் இல்லாமல் தனித்துப்போட்டியிடுவதில் துளியளவு கூட விருப்பம் இல்லை.

ஏற்கனவே வறுமையில் இருக்கம் செந்தில் குடும்பத்தினர், தேர்தலில்செலவழிப்பதற்காக இருக்கும் கொஞ்சம் சொத்துக்களையும் விற்க கடும் எதிர்ப்புதெரிவித்த காரணத்தினால், அவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதுதான் உண்மை.

இதை மறைத்து அரசியல் காரணங்களுக்காக அவரை மிரட்டினார்கள் என்றபொய்யான குற்றச்சாட்டை கார்த்திக் கூறுவதை கண்டிக்கிறோம்.

செந்தில் சாவுக்கு முழுக் காரணம் கார்த்திக்தான். செந்திலைத் தற்கொலைக்குத்தூண்டியதாக கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்குதந்தி அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளார் தினகரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X