உத்தரப் பிரதேசத்தில் சு.சுவாமிக்கு அடி, உதை
ரே பரேலி (உத்தரப் பிரதேசம்):
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகஆட்சேப மனுவைக் கொடுக்கச் சென்றபோது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால்,ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரே பரேலி தொகுதியில் மீண்டும்போட்டியிடுகிறார். இந் நிலையில் அவர் குறித்த ஒரு ஆட்சேப மனுவைக் கொடுக்கஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ரே பரேலி சென்றார்.கட்சியின் உ.பி. மாநலத் தலைவர் சங்காத்கருடன் ரே பரேலி தொகுதி தேர்தல்அதிகாரியின் அலுவலகத்திற்கு சுவாமி சென்றார்.
ஆனால் அலுவலகத்திற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. இவர்களைவழிமறித்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுவாமியையும், மற்றவர்களையும்உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
இதனால் சுவாமியும் மற்றவர்களும் திரும்பினர். திரும்பும் வழியில் சுவாமியையும்மற்றவர்களையும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து தாக்கத்தொடங்கினர். சுவாமிக்கு முகத்திலும் முதுகிலும் அடி விழுந்தது.
இதையடுத்து காருக்குள் ஓடிச் சென்று அமர்ந்தார் சுவாமி. ஆனால், அவரை வெளியேஇழுத்து அடிக்க காங்கிரசார் முயன்றனர். இதைத் தொடர்ந்து சுவாமியும் மற்றவர்களும்வேக வேகமாக அங்கிருந்த கிளம்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சுவாமி கூறுகையில், நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னைவெளியே இழுத்து அடிக்க முயன்றனர், கொலை செய்யவும் முயன்றனர்.
ரே பரேலி தொகுதியில் அராஜகம் நிலவுகிறது. அங்கு ராணுவத்தைத்தான்பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். என் மீதான தாக்குதல் குறித்து தேர்தல்ஆணையத்தில் புகார் கொடுப்பேன்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications