திருச்சி சிறையில் தமிழ் தீவிரவாதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட தமிழ்நாடுவிடுதலை இயக்கத் தொண்டர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட தமிழ்நாடுவிடுதலை இயக்கம் என்ற நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் வெடிகுண்டுவழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த 10 பேரும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்தொடங்கினர். தங்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தவழக்குகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இவர்கள்அனைவரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக திருச்சி மத்திய சிறையில் பதட்டம்ஏற்பட்டுள்ளது. போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications