அறிஞர் அண்ணாவின் மருமகள் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும் திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் மருமகள்சரோஜா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
அண்ணாவின் மகன் பரிமளம். இவரது மனைவி சரோஜா. 60 வயதான சரோஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந் நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் மரணமடைந்தார்.அவருக்கு கணவர், மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
சரோஜாவின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் திமுக தலைவர் கருணாநிதிமருத்துவமனைக்குச் சென்று சரோஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். சரோஜாவின் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications