கர்நாடக விபத்து-மதுரையை சேர்ந்த ஐவர் பலி
தும்கூர்:
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே நடந்த சாலை விபத்தில் மதுரையைச் சேர்ந்த 5 பேர்பரிதாபமாக இறந்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடகத்தில்உள்ள பல்வேறு கோவில்களுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 13ம் தேதி டாடாசுமோ வேன் மூலம் பெங்களூர் வந்த துரைப்பாண்டி குடும்பத்தினர் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு பின்னர் தர்மஸ்தாலா சென்றனர்.அங்கு வழிபட்டு விட்டு உடுப்பி சென்றனர். உடுப்பி பயணத்தை முடித்து விட்டுகர்நாடகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர்.
பின்னர் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தனர். தும்கூர் அருகே மாகடி பாளையாஎன்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோதுசாலையோரம் பழுதடைந்து நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது வேன் மோதியது.
இதில், வேன் 100 அடி தூரம் வரை உருண்டு சென்று கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் துரைப்பாண்டி, அவரது மனைவி பூங்கொடி, மகன் சரவணக்குமார், சுருதிஎன்ற 9 வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
குணாளன் என்பவரின் மனைவி மாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇறந்தார். விபத்தில் குணாளன், லோகநாதன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர்காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications