ஜெ.வுடன் வைகோ-சரத்குமார் சந்திப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்துப்பேசினர்.
ஜெயலலிதாவை வைகோ போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.அப்போது மதிமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றஉறுப்பினர்களான கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், சதன் திருமலைக்குமார், வீர.இளவரசன், வரதராஜன், ஞானதாஸ் மற்றும் புதுவை மாநலம் திருநள்ளாறு தொகுதிஉறுப்பினர் சிவா ஆகியோரும் உடன் சென்று ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.
வைகோவுடன் அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் துரை,மல்லை சத்யா ஆகிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
இதேபோல நடிகர் சரத்குமாரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இவர்கள் தவிர ஐ.என்.டி.யூ.சி. சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் 14 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சின்னச்சாமி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சுப்பையா,பொதுச் செயலாளர் காளன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.ச
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஜெயலலிதாவை சந்திக்க இதுவரைஅப்பாயின்மெண்ட் தரப்படவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications