தென்மேற்கு பருவக் காற்று வீசும்போது..
சென்னை :
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மே 30ம் தேதி வாக்கில் தென் மேற்கு பருவமழை அதாவது 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும்.இந்தியாவில், ஆண்டின் முதல் பருவ மழை இது என்பதால் தென் மேற்கு பருவ மழைபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.இந்த ஆண்டு சற்று முன் கூட்டியே அதாவது மே 30ம் தேதியே தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி விடும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
அதற்கேற்ற வகையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம்உருவாகியுள்ளது. இதன் மூலம் தென் மேற்கு பருவமழை மே 30ம் தேதியேதொடங்கி விடுவது உறுதியாகியுள்ளது.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் அதே நேரத்தில் கேரளாவைஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடங்கும்.
அதேசமயம், கேரளாவில் மழை வலுக்கும்போது திருநெல்வேலி, தூத்துக்குடி,கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்கும். இதேகாலகட்டத்தில் கர்நாடகத்திலும் பருவ மழை பெய்யத் தொடங்கும்.
செப்டம்பர் மாதம் வரை தென் மேற்கு பருவ மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சிமலையையொட்டி உள்ள தமிழக பகுதிகளில் இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை மூலம் 42 சதவீத மழை கிடைக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
இருப்பினும் தென் மேற்கு பருவ மழையை விட வட கிழக்குப் பருவ மழையால்தான்தமிழகம் முழுமைக்கும் நல்ல மழை கிடைக்கும். அக்டோபர் மாதம் வட கிழக்குப்பருவ மழை தொடங்கும்.
இதற்கிடையே பெங்களூரில் கடந்த ஒரு வாரமாகவே தினந்தோறும் மாலைவேளைகளில் பலத்த கோடை மழை பெய்து வருகிறது.