நாகநாதனுக்கு திட்டக் குழு துணை தலைவர் பதவி
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையை உருவாக்கியவரான பேராசிரியர் நாகநாதன் தமிழகஅரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் நாகநாதன். முதல்வர்கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர், காலையில் இவருடன் தான் நடைபயணம்மேற்கொள்வார் கருணாநிதி.அந்த நட்பு காரணமாக திமுக தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பொறுப்பைநாகநாதனிடம் வழங்கினார் கருணாநிதி.
நாகநாதன் உருவாக்கிய தேர்தல் அறிக்கை இந்தியா ழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது, திமுக கூட்டணிக்கு வெற்றியையும் தேடித் தந்தது. ஆனால்திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நாகநாதன் தோல்வியைத் தழுவினார்.
இந் நிலையில் நாகநாதனின் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்வகையில் அவரை மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
இதுதவிர திட்டக் குழுவும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன்,தமிழருவி மணியன், பேராசிரியர் சிதம்பரம்,
விழுப்புரம் அரசு கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிலட்சுமிகாந்தன் பாரதி, டாக்டர் சுனிதி சாலமன், தொழிலதிபர் கருத்து கண்ணன்ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்:
இதேபோல டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கம்பம் பெ.செல்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் டாக்டர் மைத்ரேயனுக்கு இந்தப் பதவியை ஜெயலலிதாவழங்கியிருந்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications