பங்குகள் சரிவு- ப.சி விலக ஜெ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுக்குப் பொறுப்பேற்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பலஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்குப.சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
உடனடியாக அவர் தனது நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
மேலும் நஷ்டம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க நிதித்துறை அமைப்புகளுக்குஆணையிட வேண்டும். பங்குச் சந்தை சரிவுக்கான காரணங்களைக் கண்டறிய சுயஅதிகாரம் கொண்ட அமைப்பின் விசாரணை அல்லது நாடாளுமன்றக் குழுவிசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications