அறநிலையத்துறை அமைச்சரானார் பெரியகருப்பன்
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவைத்தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பனிடம் அத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவர் குடிசை மாற்று வாரியம் மற்றும் தரிசு நில மேம்பாட்டுத் துறைஅமைச்சராக இருந்தார்.இவர் அறநிலையத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த வீட்டு வசதித் துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம்வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றங்களை ஆளுநர் செய்துள்ளார்.
பி.டி.ஆர். உடல் தகனம்:
முன்னதாக மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் உடல் மதுரையில்ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில்மாரடைப்பு ஏற்பட்டு பி.டி.ஆர். மரணமடைந்தார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த லாரியில் பி.டி.ஆரின் மதுரை தத்தனேரிஇடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று பி.டி.ஆருக்கு இறுதி அஞ்சலிசெலுத்தினர்.
இடுகாட்டில் முழு போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின் மற்றும் அழகிரி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
பி.டி.ஆரின் மகன் தியாகராஜன் இறுதிச் சடங்குகளை செய்தார்.