For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

38 ஆண்டுக்கு பின் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

38 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3கட்டமாக நடத்தப்படவுள்ளது.

புதுவையில் கடந்த 1968ம் ஆண்டுதான் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல்நடைபெற்றது. அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலே நடைபெறவில்லை.கிட்டத்தட்ட ஒரு தலைமுறையினர் உள்ளாட்சித் தேர்தலே தெரியாமல் வளர்ந்துவிட்டனர்.

இந் நிலையில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து புதுவை மாநில தேர்தல் ஆணையர் நாராயணா இன்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதுவை யூனியன் பிரதேசத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 24ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 27ம் தேதிஇரண்டாம் கட்ட தேர்தலும், ஜூலை 1ம் தேதி மூன்றாவது கட்ட தேர்தலும்நடைபெறும். ஜூலை 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவருகின்றன என்றார் நாராயணா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X