For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பு- மாணவன் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நேற்று மாலை திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் பலபடகுகள் சேதமடைந்தன.

சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள் அடிக்கடி கடல்கொந்தளிப்பை சந்தித்து வருகின்றன. வழக்கமாக பெளர்னமி, அமாவாசை தினங்கள்தவிர அவ்வப்போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கிவருகிறது.

இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சென்னையில் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. 5 அடி உயரத்துக்கும் அதிகமாக அலைகள் வீசின. ஞாயிற்றுக்கிழமைஎன்பதால், மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

கடல் கொந்தளிப்பினால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் கடற்கரையை காலிசெய்து விட்டு சாலைக்கு செல்லத் தொடங்கினர்.

கடல் சீற்றம் காரணமாக யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று போலீஸார்அறிவுறுத்தினர். அதிக அளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் கடலில் குளித்தனர்.அப்போது ஒரு மாணவரை கடல் அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அவரதுபெயர் தீபக். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த அவர் சுற்றுலாவில்சென்னைக்கு வந்திருந்தார். தீபக் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை மீட்க தீவிர முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை உடல் சிக்கவில்லை.

அதே போல எண்ணூ

தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி பெரியகுப்பம் பகுதிக்குவிரைந்து சென்று மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X