குஷ்பு-மேக்ஸிம் ஆசிரியருக்குமுன்ஜாமீன் மறுப்பு
குஷ்புவின் படத்தை ஆபாசமாக திரித்து வெளியிட்ட மேக்ஸிம் இதழின் ஆசிரியருக்குமுன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
டெல்லியிலிருந்து வெளியாகும் மேக்ஸிம் மாத இதழின்முதல் பதிப்பில் நடிகைகுஷ்புவின் நீச்சல் உடைப் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
குஷ்புவின் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேறு ஒரு மாடலின் ஆபாசபடத்தை அதில் பிரசுரித்திருந்தனர்.
இந்தப் படம் தனது கண்ணியத்தையும், மரியாதையையும் கெடுக்கும் வகையில்இருப்பதாக கூறி போர்க்கொடி உயர்த்தினார் குஷ்பு.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இதுதொடர்பாக புகார்கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேக்ஸிம் இதழ்களைபறிமுதல் செய்தனர்.
மேலும் பத்திரிக்கையின் ஆசிரியர் உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கைஎடுத்தனர்.
இதையடுத்து மேக்ஸிம் இதழின் ஆசிரியர் சுனில் மெஹ்ரா டெல்லிஉயர்நீதிமன்றத்தில்முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுநிராகரிக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார்.
உச்சநீதிமன்றத்தில் அவரது மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சுனில் மெஹ்ராவை கைது செய்ய சென்னை போலீஸார் நடவடிக்கையைதுரிதப்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.